எனது நூல்கள் குறித்து...
நான் அ.தமிழ்ச்செல்வன். பத்திரிகையாளன்,எழுத்தாளன்,பேச்சாளன்,சுற்றுலா பயணி எனக்கு பல்வேறு ஆர்வங்கள் உண்டு.1000 புத்தகங்களை கொண்ட ஒரு சிறு நூலகம் எனது வீட்டில் உண்டு. சிறுவயதிலிருந்து புத்தகங்களோடு வாழந்தவன். கூடுதலாக எங்கள் நகரத்தின் நூலகத்திற்கு தினசரி செல்பவன். அந்தவகையில் நான் படித்த,சுற்றுலாக்கள் மூலம் எனக்கு கிடைத்த அனுபவங்களை அவ்வப்போது கட்டுரைகளாக,கவிதைகளாக எழுதி வருகிறேன்.சிற்றிதழ்கள் ,வணிக இதழ்களில் எனது கட்டுரைகள் ,கவிதைகள் வெளிவந்துள்ளன. அதேபோல "இன்றையவானம் " என்ற வலைத்தளத்திலும் எழுதி வந்துள்ளேன். தற்போது பல்வேறு நிகழ்வுகளில் வரலாற்று தகவல்களை மேடை பேச்சாளனாக பேசிவருகிறேன். இப்படி நான் பேசியும் எழுதியும் வந்த கட்டுரைகள்,கவிதைகள்,நேர்காணல்கள் ஆகியவற்றை அமேசானில் மின்நூல்களாக வெளியிட்டு வருகிறேன். அதேபோல பத்திரிகையாளனாக பணியாற்றியபோது சமையல் துணக்குகள், அழகுகுறிப்புகள்,பொது அறிவு வினா விடைகள் சேகரித்து கொடுப்பதுண்டு அவற்றையும் நூல்களாக வெளியிட்டுள்ளேன். 1.சுயமுன்னேற்ற நூல்கள்.. 2.மருத்துவ நூல்கள் 3....